உங்களை கடவுள் ஏன் இப்படி சோதிக்கின்றார் ? | Maruthuva Jothidam

மனிதனுக்கு ஏழு பிறவிகள் இருப்பதாக வேதங்கள் சொல்கிறது. அதில் நாம் எத்தனையாவது பிறவி, இதற்கு முந்தைய பிறவியில் நாம் என்னவாக இருந்தோம்? என்ற கேள்வி சுவாரஸ்யம் நிறைந்தது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாவிட்டாலும், நாளை அது தெரிந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நேற்று என்கிற முன்பிறவி என்னாவாக இருந்திருக்கும்? நாம் எங்கே இருந்திருப்போம்? யாராக வாழ்ந்திருப்போம். என்ற கேள்விக்கு விடை தேடும் ஆசை அனைவருக்குமே இருக்கிறது.